Friday, June 4, 2010

அய்யய்யோ!!! அந்த பயங்கரமான மிருகம் பக்கத்துல வந்திருச்சு எல்லோரும் ஒடுங்க!!! ஒடுங்க!!!

 கிங் காங் பார்ட் 2  - இந்தியில்

விஷயத்த கீழே கொடுத்திருக்கிற சேதிய படிச்சு தெரிஞ்சுக்குங்க...  பஞ்சாபில இருக்கிற சிங் பாடகரெல்லாம் பொட்டிய தூக்கிட்டு ஓடிர வேண்டியதுதான்.. தலேர் மெகந்தி, இன்னும் பிற பிரபல பாடகர்களெல்லாம் கிலி அடிச்சி கிடக்கிறாங்க... சல்மான் கான், ஷாருக்கான் எல்லோரும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிக்கறாங்களாம்.. கலைஞர் இப்பவே சோனியாவுக்கு போன் பண்ணி இன்னொரு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா இந்த பிரச்சினைய பேசி தீர்த்துக்க்கலாம்னு சொல்லிட்டாராமே!!!

கூடவே கொஞ்சம் வீடியோவையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!!!

அப்பவே வீராசாமி படத்தில இந்தியில "அபி தேக்கோ" அப்படின்னு வசனம் பேசி தன்னோட இந்தி பட ஆர்வத்த சொல்லிருக்காரு நாமதான் சரியா புரிஞ்சிக்கல!!!


 இந்த கொடுமையெல்லாம் இந்தியா லெவலுக்கு போக போகுது !!! இதனால எப்படியும் இந்தியா வல்லரசு நாடா கண்டிப்பா ஆயிடும்!!!


 செய்தி 
நன்றி தினமலர்


திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசி பிரபலமானவர் நடிகர் விஜய் டி.ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக்காதலி, உறவைக் காத்த கிளி, மோனிசா என் மோனலீசா, வீராசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ராஜேந்தருக்கு அவருடைய தாடியும் அடையாளத்தை கொடுத்தது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ராஜேந்தர், இப்போது தனது பார்வையை பாலிவுட் பக்கம் பதிக்கப் போகிறாராம். இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜிம்முக்கு சென்று உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டிருக்கிறாராம். அதோடு இந்தியும் படித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறது கோடம்பாக்கத்து தகவல்.

தமிழ் சினிமாவைப் போலவே இந்தியிலும் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தயாரிப்பு என ஏழெட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய திட்டமிட்டிருக்கும் ராஜேந்தர், இந்தி படத்தில் பஞ்சாபி பாடகர் வேடமேற்கப் போ‌கிறாராம். அதற்காக சிங் கெட்-அப்பில் சமீபத்தில் போட்டோ‌செஷன் முடித்திருப்பதுடன், பாடல்கள் கம்போஸ் பணிகளையும் முடித்து விட்டாராம். "பொதுவா பாலிவுட்ல இந்த ஸ்டைலில் யாரும் படம் எடுத்ததும் இல்ல. நடிச்சதும் இல்ல" என்று சொல்லும் டி.ஆர்., பாலிவுட்டுக்காக தனது ஸ்டைலில் இருந்து மாறவே மாட்‌டேன். எனது அடுக்குமொழி ஸ்டைல் பாலிவுட்டிலும் தொடரும், என்றும் கூறியிருக்கிறார்.