பிச்சுபுடுவேன் படவா !! (கொஞ்சம் ஓவரா பிட்ட போடரமோ ....!! ??) அப்படின்னு நம்ம மனசாட்சி கவுண்டபெல் வாய்சுல கன்னா பின்னான்னு திட்டுச்சு..
அடுத்தது எங்க மொட்ட போடறது, ரெண்டு குல தெய்வ கோவில் இருந்தாலே வில்லங்கம் தான் !! ஒரு வழியா கட்டி உருண்டு முடிவுக்கு வந்தாச்சு. மதுக்கம்பாளையத்தில இருக்கிற சாமிக்கே மொட்டய போட்டுடலாம் , வேணும்னா இந்த சாமி போய் உடுமலைபேட்டயில இருக்கிற சாமிகிட்ட சிபாரிசு பண்ணிக்கட்டும்.
யார எல்லாம் கூப்பிடறதுன்னு ஒரு லிஸ்ட் போட்டா!!!! நம்ம சொந்தம் பெரிசு இவங்கள விட்டா அவங்களுக்கு கோபம் வரும் அவங்கள விட்டா இவங்களுக்கு கோபம் வரும் ( அப்பா இப்பவே கண்ணை கட்டுதே!!) ஒரு வழியா அதையும் சமாளிச்சு ஒரு அம்பது பேர கூப்பிட்டு மொட்டைய போட்ரலாம்னு மாமா முடிவு பண்ணினாரு.. அப்பாடா ஒரு வழியா பிரச்சினை முடிவுக்கு வந்திருச்சு...
இது தான் மதுக்கம்பாளையம் ... ஒரு பெரிய வீடு தெரியுதா?? அத பார்த்து வச்சிக்கங்க அதுக்கொரு கதை இருக்குது சாமி!!! அத இன்னொரு பிளாக்குல எழுதறேன்...
குலதெய்வத்த பய பக்தியா கும்பிட்டாச்சு ....
பாப்பா உன்னோட அழகான முடி இன்னும் கொஞ்ச நேரத்துல காணாம போக போகுதே.....
எனக்கு மொட்டை போட போறிங்களா ???
ஊர்வலமா கிளம்பியாச்சு ஆத்தங்கரைக்கு....
ஹும்ம் நமக்கும் சின்ன வயசுல இப்படித்தான் மொட்டைய போட்டாங்களோ ??
பஸ்க்கு காத்திருந்த நேரத்துல நம்ம புகைப்பட திறமைய வெளிப்படுத்தலாமேன்னு ஹி!! ஹி!! ஹி!!
ஆமா இவரு பெரிய ஒளி ஓவியரு !! மிளகாய் செடிய கூட விட மாட்டாரு !! இது என் வீட்டம்மாவோட கமெண்ட்டு
அப்பாடா வேல முடிஞ்சுது இன்னிக்கு நைட்டே ரயில புடிச்சு பெங்களூர பார்க்க போக வேண்டியதுதான்..
கடைசில வச்சாங்க பாருங்க ஆப்பு " ஏனுங்க மாப்பிள்ளை !!!! உடுமலபேட்டயில வச்சு மொட்ட அடிச்சா கெடா வெட்டணும்னு இங்க வச்சு சைவ சாப்பாடு போட்டுட்டிங்களே "!!!!!!
கவுண்டபெல் காலத்திலிருந்து நீங்கல்லாம் மாறவே இல்லியா?? "ஏங்க காது குத்தியாச்சா கெடாய எப்பங்க வெட்டுவாங்க" :-)
கிடாய வெட்டிட்டு காது குத்துவாங்களா?? காத குத்திட்டு கிடாய வெட்டுவாங்களா??