கனவு
காலையில் தொலைத்த
இரவின் எச்சம் .....!
மண்ணின் மைந்தர்கள்
ஒட்டிய வயிறு
ஒடுங்கிய கண்கள்
கனவுகள் அதிலே
இவர்கள்
விதி வந்தும் சாகாதவர்கள்....!
சாலையோர மரங்கள்
நாங்கள்
சாலை காவலர்கள்
எங்களுக்கும்
அடையாள எண்கள்......!
நிலவு
வெள்ளுடை தரித்த
இரவு விதவை ......!
சிறை
நான்கு சுவர்களுக்குள்
மனங்களுக்கு அல்ல .....
No comments:
Post a Comment