பெரிய வாசல்களில் இட்ட கோலங்கள்
சுருங்கி புறாக்கூண்டு வீட்டு வாசல்களில்
விறகு அடுப்பின் சூரியப்பொங்கல்
இன்று எரிவாயு அடுப்பில்
மாட்டு வண்டி கட்டி ஆற்றுக்கு
பூப்பறிக்கும் நோன்புக்கு போனவர்கள்
கான்க்ரீட் காடுகளில்
நுரை பொங்க கறந்து பருகிய பால்
இன்று வீட்டு கதவில் பாக்கெட்டில்
இழந்தது கோடி இருந்தும்
நினைவுகளில் இருப்பதை வைத்து
நகரும் நகர வாழ்க்கை!!!
No comments:
Post a Comment