Monday, March 9, 2009

அரசியல் யாவாரிக வாராங்க உஷாரய்யா உஷாரு !!



அரசியல் யாவாரிக வாராங்க உஷாரய்யா உஷாரு !!
(வரும் பாராளுமன்ற மற்றும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து)

நம்ம தலைமை தேர்தல் ஆணையர் அய்யா தேர்தல் தேதி சொல்லிபோட்டாங்க. நம்ம ஊர் சனம் முச்சுடூம் ஊர் சாவடியில உட்கார்ந்து அத பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனி கேட்டுங்கங்க!! ஊட்டுக்கு ஊடு பிளாஸ்டிக் கொடம்தான் கோழி பிரியாணிதான். ஆட்டோவில கொழாய் கட்டி "வாக்காளப்பெருங்குடி மக்களே!! உங்கள் பொன்னான வாக்குகளை டுபாக்கூர் சின்னத்துக்கே அளியுங்கள்" காது சவ்வ கிழிக்காம விடமாட்டாங்க. கொஞ்ச நாளைக்கு நம்ம ஊரு ஒரே அல்லோல கல்லோலப்படும்.

ஊர்ல இருக்கிற உப்புமா கட்சியெல்லாம் ஒரே படம் போடுவாங்க..எல்லாகட்சியும் எங்க கூட தொகுதி உடன்பாட்டுக்கு வரிசையில நிக்கிறாங்கஅப்படின்னு பத்தி பத்தியா பேட்டி குடுப்பாங்க. நம்ம கலைஞர் அய்யா "உடன்பிறப்பே " அப்படின்னு முரசொலியில கவிதை எழுத ஆரம்பிச்சுடுவாரு. நம்ம அம்மா புரட்சி தலைவிக்கு திடீருன்னு இலங்கை தமிழர் மேல கரிசனம் வரும் உண்ணா விரதம் எல்லாம் இருக்கப்போறாங்க!!. இம்புட்டு நாளுஅவங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க!!! விசயகாந்து கலைஞர் அய்யா ஆட்சிய இன்னும் அதிகமா விமர்சனம் பண்ணுவாரு. மருத்துவர் அய்யா, புரட்சி தலைவி சகோதரிய என்னிக்கி போயிபார்க்கலாம்னு நல்ல நாள் பார்க்க ஆரம்பிச்சிடுவாரு. வைகோ எத்தனைமேடையில அழுக போறாருன்னு தெரியல( பேசாம ஒரு டிவி ஆரம்பிச்சு மெகாசீரியல் பண்ண ஆரம்பிக்கலாம் டிஆர்பி ரேட்டிங் எகிருடும்கண்ணோவ்!!!)

திருமாவளவன்
அய்யா , கிருஷ்ணாசாமி அய்யா , சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரு எல்லோரும் யார் கடைக்கி போனா அதிக முட்டாய்( சீட்டு ) கிடைக்கும்னுகணக்கு போட ஆரம்பிச்சிருவாங்க. இதுக்கு நடுவுல கம்யூனிஸ்ட் தோழர்கள் கலங்காம காமெடி பண்ணுவாங்க. காங்கிரஸ் கட்சிய உட்டுபோட்டமோ?? அதுதான் குடுமிபுடி சண்டை தினமும் டீக்கடை பேப்பர்ல பார்க்கரமில்ல..அப்புறம் என்ன யாரு ஆட்சிக்கு வந்தாலும் அடுத்ததா காமராஜர் அட்சி அமைப்போம் அப்படின்னு ஒரு அறிக்கை விட்டு சத்யமூர்த்தி பவன வாஸ்து படி மாத்தினா காங்கிரஸ் புராணம் முடிஞ்சு போச்சு. எல்லா கட்சிகாரங்களும் ரயில , பிளேன புடிச்சு டெல்லிக்கு ஓடுவாங்க. அங்க போயி என்ன பேசுவாங்க யார் கால்லயெல்லாம் உழுவாங்ககிரதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ராமாயண காலத்துல அனுமாரு இலங்கைக்கு ஒரே தாவா தாவி போனாருன்னு எங்க ஆத்தா கதை சொல்லும், அதெக்கெல்லாம் சவாலு உடர மாதிரி எத்தனை கட்சி தலைவருங்க கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும், தைலாபுரத்துக்கும் தாவ போறங்கன்னு தெரியலிங்க!! இன்னும் நடக்க போற கூத்தெல்லாம் போன தேர்தல்ல பார்த்ததை தூக்கி சாப்பிடற மாதிரித்தான் இருக்கும்.

எல்லா கட்சி தலைவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்ங்க,

ஏஞ்சாமி?? சீரியல் லைட்டுக்கும், டூப் லைட்டுக்கும் எங்கிருந்து கரண்டு எடுக்கரிங்க அத கொஞ்சம் எங்க ஊருப்பக்கம் கொடுத்தா, எங்க புள்ளைகளும் ரெண்டு பரீட்சைக்கு படிக்கும், உங்களுக்கும் புண்ணியமா போகும். கட்அவுட்டுக்கு செலவு பண்ற காச வேலையில்லாத பட்டதாரிகளுக்கு கோழிப்பண்ணை வச்சு குடுக்கலாம்ல..

இலவசமா எல்லாத்தையும் கொடுத்து எங்கள பிச்சக்காரன் மாதிரிஆக்கிப்போட்டிங்க. டிவி பொட்டி , எரிவாயு அடுப்பு , வேலையில்லாதவனுக்கு
உதவித்தொகை, இன்னும் எதுக்கெல்லாமோ உதவித்தொகை..( கணக்குதெரியலிங்க!!!).. இலவசமாவே எல்லாம் கெடச்சா யாருக்குதாங்க உழைக்க மனசு வரும். இப்படி இலவசமா பல பொருட்கள கொடுத்த காசுக்கு தொழில வளர்த்திருக்கலாம் , விவசாயத்த வளர்த்திருக்கலாம்.. இந்த தடவையாவது உருப்படியா சில திட்டங்கள போடுங்கய்யா!!!

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு, யாரு ஆட்சிக்குவந்தாலும் முதல்ல செய்யிற வேல , முந்தின ஆட்சியில போட்ட திட்டத்தயெல்லாம் நிறுத்தரதுதான்.. முன்னால் முதல்வர செயில்ல போடறது. இப்படிஉங்களுக்கு பழி வாங்கற படலம் முடியரதுக்கே அஞ்சு வருசம்சரியாப்போயிடுது.. அப்புறம் எங்க மக்களுக்கு நலத்திட்டம் எல்லாம் போடறது, செயல்படுத்தறது. இதெயெல்லாம் கொஞ்சம் மாத்திக்க முடியுமா உங்களால??

உங்களோட மகன் மகளுக்கு எம்பி சீட்டு அப்படியே மந்திரி பதவி.. எத்தனை தடவ கூட்டணி மாறினாலும் அசராம, காலையில பாராட்டுன கட்சிய , சாயங்காலமே திட்டறது.. எப்படி உங்களால மட்டும் முடியுது. "தங்கத்தலைவர் வாழுக!!" அப்படின்னு தொண்டை கிழிய கோஷம் போடற அடிமட்டத் தொண்டனையும் கொஞ்சம் மதிங்க. மத்தவங்களையும் வாழ விடுங்க.

அப்துல் கலாம் வந்தாருன்னா இந்தியா மிளிரும் அப்படின்னு ஒரு மேடையிலபேசிட்டு , புறகாண்டியே அவருக்கு எதிரா ஒட்டு போட்டு அவர தோக்க வச்சவங்க தானே நீங்க.

தேர்தல் பார்லிமெண்டுக்கா இல்ல சட்டமன்றத்துக்கான்னு தெரியாமயே ஒட்டு போடற ஆளுங்க இன்னும் நிறைய இருக்காங்க. இன்னும் இந்திரா காந்தி கட்சிக்கும், எம்சியார் கட்சிக்கு மாத்திரம்தான் ஒட்டு போடற ஆளுங்களும் இருக்காங்க. இவங்களுக்கு நீங்க என்ன செஞ்சிங்க? இன்னும் என்ன செய்ய போறீங்க?

இப்படி எத்தனை புலம்புனாலும் , ஒரு தேர்தல் விடாம குடுக்கற பிரியாணிய தின்னுப்புட்டு ஒட்டு போடற இந்த வாக்காளன் ரொம்ப நல்லவன்னு ஏமாத்திக்கிட்டே இருக்கலாம்னு நினைச்சி போடதிங்க!!! ஒரு தடவ அம்மாஅடுத்த தடவ அய்யா இப்படி மாத்தி மாத்தி ஆட்சியில உட்கார வச்சிக்கிட்டே இருக்கானே இவன எப்படி ஏமாத்தினாலும் தாங்கறானே அப்படின்னு முளகாய் அரச்சிக்கிட்டே இருக்கிங்களே ?? மனசாட்சியே இல்லையா உங்களுக்கெல்லாம் ?? ஒரு நாளக்கி இவங்க முழிச்சிக்கிட்டா நீங்க என்ன ஆவிங்கன்னு நீங்களே நினச்சி பார்த்துக்கோங்க!!!


வாக்காளப்பெருங்குடி மக்களுக்கு ஒரு விண்ணப்பம்ங்க

அமெரிக்காவில யாரோ ஒபாமா அப்படின்னு ஒருத்தரு மாற்றம் தரேன்னு சொல்லி செயிச்சு சனாதிபதி ஆயிட்டராமே ? அவரு மாதிரி எங்களுக்கு ஒரு தலைவரு எப்போ வருவாரோன்னு பாத்து பாத்து கண்ணு பூத்து போச்சி !!!

அய்யா வாக்காளப்பெருங்குடி மக்களே!! இந்த தடவையாவது ஒரு மாற்றத்தைகுடுங்கன்னு எங்க ஊர் சார்பாவும் மத்த எல்லா மக்கள் சார்பாவும் கேட்டுக்குறேன்.
எரியற கொள்ளியில எந்தகொள்ளி நல்ல கொள்ளி அப்படின்னு கேட்கறிங்களா?? அது தெரிஞ்சா நம்ம தலையெழுத்து ஏன் இப்படி இருக்குது?

2 comments:

நையாண்டி நைனா said...

மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் நண்பரே....

உங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.

விவேக் said...

/*நையாண்டி நைனா said...

மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் நண்பரே....

உங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.*/

தங்கள் ஆதரவுக்கு நன்றி !!