Tuesday, May 4, 2010

புகைப்படங்கள்


எப்போதாவது திருப்பிப்பார்க்கும்
பழைய புகைப்படங்கள்
நினைவு படுத்துவது...

பள்ளி நண்பர்களை
கல்லூரி நண்பர்களை
அலுவலக நண்பர்களை
பக்கத்து வீட்டு நண்பர்களை...

மகிழ்ச்சியான எத்தனையோ பயணங்களை
புகை வண்டியில் கூட பயணித்தவர்களை...

சொல்ல மறந்த
சொல்லாமல் விட்ட காதல்களை
இன்னும் எத்தனையோ நினைவுகளை...

கடைசியில் மிஞ்சி நிற்பது ஒரே ஒரு கேள்விதான்???
இதில் எத்தனை பேர் நம்மோடு தொடர்பில்?

நட்பு எப்போதும் 
புகை வண்டி பயணம் மாதிரி
ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
வண்டி மட்டும் 
நிற்காமல் ஓடிக்கொண்டே... 

7 comments:

Anonymous said...

மிகவும் நன்றாக உள்ளது உங்கள் கவிதை...

சிவாஜி சங்கர் said...

:)..............?

சுந்தரா said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு விவேக்.

அதுக்கு முன்னாடி,ஆளில்லாத கடையில் டீ ஆத்தற கதையை ரொம்பவும் ரசித்தேன் :)

Gops said...

Nan indrum thodarbil, pugai vadiyil illai, orkut, facebook il :-).

விவேக் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நண்பர்களே!
@Gops .. orkut , facebook இதெல்லாம் தொடர்பில் இருக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரம்
10 -15 வருடங்கள் கழித்து நண்பர்களை கண்டுபிடிக்க இந்த தளங்கள் எனக்கு உதவி இருக்கின்றன

விவேக் said...

@sivaji sankar
:)..............?
நண்பா இது புரியவே இல்லியே :-)

Magesh Kumar said...

very true..