Tuesday, December 9, 2008

சங்கீதம்



பூக்களின் மீது
வண்டு சுற்றும் ரீங்காரம்
மூங்கிலின் ஊடே காற்று

புகுந்து வரும் சங்கீதம்

மனம் புகுந்து எண்ணங்கள்
வருடும் புல்லாங்குழல் இசை
நரம்புகளில் சுரங்கள் மீட்டி
ஆனந்த சுதி கூட்டும் யாழிசை

நிலாக்கலங்களில் என் காதருகே
கதை பேசும் பூங்காற்று
சிற்றோடைகளாய் சலசலத்து மலைகளிலிருந்து
வீழ்ந்து பயமுறுத்தும் நீருற்று

இயற்கையின் விசித்திரங்கள்
சங்கீதமாக பட்டது
"அம்மா" முதல் மழலைச்சொல்
வந்து உயிர் தொடும் வரை........!!!!!





1 comment:

Anonymous said...

unga kavithai sangeetham pathi nalla irunthathu.. nila kalam thane athu.. nila kalam nu potu irukeenga... nice one... keep it up...